நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி !- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?
விசையறு பந்தினைப்போல் -உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் -சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் -இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?
நல்லதோர் வீணை
Posted by Karthik 9:09 AM
Labels: சுயசிந்தனை, தோத்திரப் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment