நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி சிவசக்தி !- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையறு பந்தினைப்போல் -உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் -சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

0 comments: