முரசு !!!
Posted by Karthik 10:42 AM 1 comments
Labels: பல்வகைப் பாடல்கள்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
Posted by Karthik 10:59 PM 0 comments
Labels: தேசிய கீதங்கள்
புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவ ந் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது
Posted by Karthik 12:05 PM 0 comments
Labels: கவிதைகள், பல்வகை பாடல்கள்
அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ;தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
Posted by Karthik 11:04 AM 0 comments
Labels: கவிதைகள், தனிபாடல்கள்
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி !- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?
விசையறு பந்தினைப்போல் -உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் -சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் -இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?
Posted by Karthik 9:09 AM 0 comments
Labels: சுயசிந்தனை, தோத்திரப் பாடல்கள்
மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு ;
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு ;
ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு ;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு .
இந்தப் பதர்களையே நெல்லா மென
எண்ணி இருப்பேனோ ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே .
உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ ?
கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே !
Posted by Karthik 11:00 PM 0 comments
Labels: கவிதைகள், தோத்திரப் பாடல்கள், நவரசம், மகாசக்தி
கண்ணம்மா என் காதலி - 1
காட்சி -வியப்பு
செஞ்சுருட்டி -ஏகதாளம்
ரசங்கள் - சிருங்காரம் ,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்டு நாடு நிசியில் தெரியும்
நக்ஷத்திரங்க ளடீ !
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகையோ தான் ?
நீலக் கடலலையே உனது
நெஞ்சி லலைக ளடீ !
கோலக் குயிலோசை உனது
குரலினிமை யடீ !
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா !
மருவக் காதல் கொண்டேன்
சத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ !
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி ! இது பார்
கன்னத்து முத்த மொன்று !
Posted by Karthik 8:36 AM 1 comments
Labels: கண்ணம்மா, கண்ணன் பாட்டு, கவிதைகள், காதல்