யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்இனிதாவ தெங்குங்
காணோம்பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை
கெட்டுநாமமது தமிழரெனக்
கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப்
போல்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் , ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்
தமிழ்
Posted by Karthik 11:19 AM
Labels: தமிழ், தேசிய கீதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
I am new here; and I appreciate your effort to create a blog on Bharathi. I am slowly going through your other blogs, Great work.
Post a Comment