ராகம் -புன்னாகவராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் -கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை )
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன ,கொன்றவை போக்கென்று
(நின்னை )
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
(நின்னை )
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
(நின்னை )
நல்லது தீயது நாமறியோம் அன்னை !
நல்லது ! நாட்டுக தீயதை ஓட்டுக !
(நின்னை )
கண்ணம்மா எனது -குல தெய்வம்
Posted by Karthik 10:42 AM
Labels: கண்ணன் பாட்டு, கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment