கண்ணம்மா எனது -குல தெய்வம்

ராகம் -புன்னாகவராளி

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் -கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

(நின்னை )
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன ,கொன்றவை போக்கென்று

(நின்னை )

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்

(நின்னை )

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

(நின்னை )

நல்லது தீயது நாமறியோம் அன்னை !
நல்லது ! நாட்டுக தீயதை ஓட்டுக !

(நின்னை )

0 comments: