விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம் ;வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்
உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்
இடையிலேப்பட்ட கீழ்நிலை கண்டீர்
இதற்கு நாமொருப் பட்டிருப் போமா ?
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ;
குறைவி லாது முழு நிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீர நந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்
அறிவிழந்தது பண்டை வழக்கம்
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அக்தே
விடியும் நல்லொளி காணுதி நின்றே ,
மேவு நாக ரிகம்புதி தொன்றே,
கொடியர் நம்மை அடிமைகள் என்றே ,
கொண்டு தாம் முதல் என்றன ரன்றே ,
அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே ,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே .
0 comments:
Post a Comment